கலையுலகில் கலைவருணண்
கலையுலகில் கலைவருணண்
மூத்த மொழியாம் முத்தமிழை
முடி சூட்ட கலைநிலவாய் கருத்தரித்த
காவியக் கலைஞன்
கதிரொளியாம் கலைக்குரிசில்
கன்னித் தமிழால்
கலைமகள் புகழ் பாடி
தொன்மைக் கூத்தால்
தென்மாங்கு பாட்டிசைத்து
நானிலமெங்கும்
நாடியே சென்று
நாடகத்துறை வளர
நாவசைத்த பாவலன்
கலைக்குரிசிலின்
கவிதை விளைச்சலில்
கனன்றெழுந்த விதைகள் விழுதுகள்
ஆல் போல் திகழ்கின்றன
வாழையடி வாழையென
வழிவந்த முத்து ஒன்று
சவிரிமுத்து அண்ணாவியார்
வாரிசாய் திகழ்கின்றார்
நடிகனாய் புலவனாய்
நல்லதோர் நெறியாளனாய்
நாடக அர்ப்பணிப்பால்
நாடறிந்த கலைஞனாய்
பாரம்பரிய கலையை சமூகத்தின்
பயன் பாட்டுக் குரியதாக்க
தாயக மக்களுந்தன்
தன்னார்வ தொண்டு கண்டு
கலைத்தென்றல் பட்டமுடன்
கலைவேந்தன் விருதளித்தும்
பொன்னாடை போர்த்தி
பெருவிழா கண்டனரே
புலம் பெயர் நோர்வேயில்
புதிய தலைமுறை மாணவர்க்கு
புகட்டிய கலை நெறியால்
கலைவருணனென தமிழ்ச்சங்க விருது பெற்று
மண்ணின் உருவாக்கத்தில்
மரியாதைக் குரியவராய்
கட்டளைகாரர், குத்தகை காரனெனும்
கருத்துற சமூக சேவையாளனாயும்
வாழ்நாள் கலை சாதனைக்காய்
வட மாகாண முதல்வர் விருதும்
பண்பாட்டு பெருவிழாவில்
யாழ் முத்து பட்டயமும்

இலங்கை அரசாங்கத்தின்
இணையற்ற விருதான
கலா பூஜணம் எனும் உயரிய
அரச அங்கிகாரம் பெற்றபோது
காலனும் கவர்ந்து
கண்மூடி தூங்குகையில்
கடப்பாடுடை நிகழ்வில்
கிறிஸ்துராசா கலைக்குரிசில் மன்றம்
கலாசமூத்திரம் விருதை
கலைப் பாதங்களில் அர்ப்பணிக்க
கலா கங்கை விருதை நோர்வே
உயிர்மெய், கலைப்பாலம் காணிக்கையாக்கிடவே
இறவாப் புகழுடன்
இணையற்ற கலைஞனாய்
சாகாவரம் பெற்று
சரித்திர மானீர்கள்
காலங்கள் கடந்தும் உங்கள்
கலைப்பயணம் தொடரும்
கலைக்குரிசில் கலாமன்றம்
சர்வதேச ஒன்றியம்